Friday, March 25, 2011

கவிச் சக்கரவர்த்தி

அரசவையில் எப்போதும் எதிரும் புதிருமான நபர்கள் கம்பனும், ஒட்டக்கூத்தரும்.  அன்றும் வழக்கம் போல அவை கூடியது.  வழக்கமான அலுவல்களுக்கு‍ப் பிறகு‍  ஒரு‍ சுவாரஸ்யமான போட்டி‍  மேற்படி‍ இருவருக்கும் துவங்குகிறது. 

கம்பர் ஒரு‍ பாடலைப் பாடுகிறார்.  பாடலின் பொருள் நயத்தில் மூழ்கி அரசன் அகமகிழ்கிறான்.  ஒட்டக்கூத்தரோ எதிர்பார்த்தது‍ போலவே முகத்தை திருப்பிக் கொள்கிறார்.  அரசன் இதைப் புரிந்து‍ கொண்டு‍ கூத்தரை எதிர்கவி பாடும்படி‍ கேட்கிறான். கம்பர் பாடிய பாடலில் நாயகியை மெல்லிடையாள் என வர்ணித்திருக்க, கூத்தரோ தன் தலைவியை பிடியுடையாள் என வர்ணித்து‍ பாடல் புனைகிறார்.  ஒரு‍ கைப்பிடிக்குள் அவளின் இடை அடங்கி விடுமாம்.

இப்போது‍  கம்பனி்ன் முறை.  புன்னகைத்தவாறே பாடல் புனைகிறார்.  நாயகிக்கு‍ அவர் கொடுப்பது‍ கொடியிடை.  அதாவது‍ அவரை, பரங்கி போன்ற கொடி‍கள் எந்தளவிற்கு‍ தடிமனாக இருக்குமோ அந்தளவிற்கான இடையாம்.   ஒட்டக்கூத்தர் பக்கம் இப்போது‍ எல்லோரும் பார்க்க,  எடுத்த எடுப்பிலேயே நூலிடையாள் எனப் பாடலை ஆரம்பித்து‍ பந்தை பவுண்டரி்க்கு‍ விரட்டுகிறார்.

பிடி, கொடி, நூல் இதை விட மெல்லிய ஒன்றை உவமையாக சொல்ல முடியுமா?  பந்து‍ இப்போது‍ கம்பரின் களத்தில்.  அசராமல் தன் கவியை உரைக்க ஆரம்பி்க்கிறார் கவிச்சக்கரவர்த்தி.  எல்லோரும் ஆவலாக நாயகியி்ன் இடையையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். (!)

ஒரே போடாக போட்டார் கம்பர்.  ஆம் தன் நாயகிக்கு‍ இடு்ப்பு என்று‍ ஒன்று‍ இல்லலே இல்லையாம்.  அதாவது‍ இடை என ஒன்று‍ அவளுக்கு‍ இருக்கிறதா, இல்லையா என எதிரில் இருப்பவர் குழம்பி போகும் அளவுக்கு‍ மெல்லிய இடையாம்.

ஒட்டக்கூத்தர் இந்த பாடலுக்கு‍ அசந்து‍ போய் கை தட்டி‍ வாழ்த்தினாரா என்றெல்லாம் தெரியவில்லை. 



No comments:

Post a Comment