Thursday, March 10, 2011

முதல் பதிப்பு

அச்சு‍ இயந்திரம் தமிழகத்துக்கு‍ வந்திறங்கிய நேரம்.  தமிழில் பைபிளை முதன்முதலி்ல் அச்சேற்றியாகிவிட்டது.   இப்போது‍ இலக்கியம் பக்கம் தன் கவனத்தை திருப்பிய ஆங்கிலேய அரசாங்கம், முதன்முதலில் எந்த நூலை அச்சேற்றலாம் என தன் ஊழியர்களை கேட்க, சிவக்கொழுந்து‍ தேசிகரை நோக்கி எல்‌லோரும் கைநீட்ட அவரை வரவழைத்தார் துரை.

கும்பகோணம் அருகேயுள்ள ஒரு‍ குக்கிராமம் கொட்டையூர்.  ஆதீனத்தில் புலவராக இருந்தவர் சிவக்கொழுந்து‍ தேசிகர்.  வெள்ளைக்கார துரையிடம் சென்ற தேசிகர், சற்றும் தாமதியாமல், துரை கேட்ட கேள்விக்கு‍ "திருக்குறள்" என பதிலளித்தார். 

"திருக்குறளில் அப்படி‍ என்ன இருக்கிறது"‍ - இது‍ துரை
"என்ன இல்லை"- இது‍ தேசிகர்
"எல்லாம் இருக்கிறதா?‍"
"அனைத்தும் இருக்கிறது?"
சுற்றும் முற்றும் பார்த்த வெள்ளையன், "அதோ அந்த கல்லைப் பற்றி இருக்கிறதா." என கேட்க, 
"கல்லைப் பற்றி இருமுறை வருகிறது‍" என பதிலளித்தவர் உடனே, 
"பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல்"  என்ற குறளை கூறி துரையை அசத்தினாராம்.
குறள் புத்தக வடி‍வில் அமோகமாக அச்சேறியதாம்.
இப்படி‍ ஒரு‍ சம்பவத்தை எங்கேயோ படித்த நினைவு.  அதை என் முதல் பதிப்பாகவும் வெளியிட உதவிய தேசிகருக்கு‍ நன்றி.
தேசிகரைப் பற்றிய மற்ற விஷயங்களை யாரேனும் தெரியப்படுத்தினால் அவருக்கு‍ தன்யனாவேன்.

ஹலோ...... என்னது‍ ............... புரியல  ........ஆங்  ..... அந்த இன்னொரு‍ குறளா,
அஸ்கு, புஸ்கு‍ நீங்களே வள்ளுவர்கிட்ட கேட்டு‍ தெரிஞ்சுக்குங்க.


No comments:

Post a Comment