மல்லிகை மாலைக்கு 400 ரூபாய், வெடி வெடித்தால் 100, பிரியாணிக்கு ஆகும் செலவு என எல்லாவற்றையும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப் போவதாக ஒரு நீண்ட பட்டியலை தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பதை படித்திருப்பீர்கள்.
கூடவே இதையும் சேர்த்திருக்கலாம். கேட்ட தொகுதி தங்கள் கட்சிக்கு கிடைக்காதது, எதிர்பாராத நபருக்கு கட்சி மேலிடம் டிக்கெட் கொடுப்பது, போன்ற நிகழ்வுகளின் போது கட்சித் தொண்டர்கள் டென்ஷனாகி, உணர்ச்சி வயப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் உருவ பொம்மையை எரி்த்தால் அதற்கும் ஒரு தொகையை நிர்ணயம் செய்து அதை வேட்பாளர் கணக்கில் சேர்த்து விடலாம்.
அநாகரிகமான இந்த செயலை தடுத்த புண்ணியம் கமிஷனுக்கு கிடைத்தது போலவும் இருக்கும். சுற்றுச்சூழலை காத்தது போலவும் இருக்கும்.
No comments:
Post a Comment