Tuesday, March 29, 2011

அட அப்படியா?

ஒரு‍ "நொடி"யின் அருமையை உணர வேண்டுமானால் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவரிடம் கேளுங்கள் என சொல்வது‍ வழக்கம்.  ஆனால் இந்த விஷயத்தை படித்தால், நீங்கள் இப்போது‍ அந்த சொலவடையை  பரிசீலனை செய்ய வேண்டியது‍ வரும். 

1969ஆம் ஆண்டு‍ விண்வெளி வரலாற்றில் ஒரு‍ மைல்கல்.  ஆம், அந்த வருடம்தான் முதன்முதலில் ஒரு‍ மனிதனின் காலடி‍ தடம் பூமிக்கு‍ வெளியே ஒரு‍ துணைக்கிரகத்தில் பதிந்தது.  பதிந்த இடம் நிலா, பதித்தவர் ஆம்‌ஸ்ட்ராங்.  இரண்டாவதாக பதித்தவர்‌ ஆல்டிரின்.  இதுவரைக்கும் பள்ளியில் படித்திருப்பீர்கள். 

ஆனால் முதன்முதலி்ல் காலடி‍ தடம் எடுத்து‍ வைக்க வேண்டியது‍ ஆல்டிரின் தானாம்.  அப்பல்லோ நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,‍ பைலட் பர்ஸ்ட் என கட்டளை வருகிறது.  ஆனால் ஆல்டிரினுக்கு‍ ஒரு‍ சின்ன தயக்கம்.  எந்தக் காலை வைத்து‍ இறங்குவது, முதன் முதலில் இறங்குகிறோம், என்ன ஆகுமோ?  அப்படியே உள்ளே இழுத்து‍ விடுமா அல்லது‍ சுடு‍ மணலாக இருந்து‍ அப்படியே பஸ்பமாக்கி விடுமா என்றெல்லாம் ஒரு‍ கணம் தயங்கிகொண்டிருந்த வேளையில், இரண்டாவது‍ ஆணை நாசாவிலிருந்து‍ வருகிறது.  கோ பைலட் நெக்ஸ்ட் என்று.  ஆமாம் கோ பைலட்டாகத்தான் உடன் சென்றார் துணிச்சல்கார - முன்னாள் அமெரிக்க கப்பல் படை வீ்ரர் ஆம்ஸ்ட்ராங். 

தாமதிக்காமல் தன் காலை எடுத்து‍  நிலவில் பதித்தார் ஆம்ஸ்ட்ராங்.  நிலவு முதன் முதலில் அவரின் காலடி‍ தடத்தை தன் மேல் பதித்து‍ கொண்டது.  ஒரு‍ கண நேர தாமதத்தினால் நிகழ்ந்த இச்சம்பவம் ஆல்டிரினை பின்னுக்கு‍ தள்ளி, வரலாற்றில் ஆம்ஸ்ட்ராங்கை - முதன் முதல் என்ற தலைப்பின் கீழ் - தன்னுள் ஏற்றுக் கொள்வதற்கு‍ ஒரு‍ வாய்ப்பை வழங்கி விட்டது‍ ஒரு‍ சுவாரஸ்யமான விஷயம்தான்.

ஒரு‍ நிமிடத் தயக்கம் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக மேற்படி‍ சம்பவத்தை, இந்த வாரம் வெளியாகியுள்ள நமது‍ நம்பிக்கை இதழில் அட்டகாசமான ஒரு‍ கட்டுரையாக வெளியிட்டுள்ளார்கள்.  படித்து‍ பாருங்கள்.

நன்றி: நமது‍ நம்பிக்கை இதழ்  ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா.

பி.கு‍: எங்கேயோ படித்த ஞாபகம்.  மேற்படி‍ இருவரின் காலடி‍ தடமும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு‍ எந்தவித சேதாரமும் ஆகாமல் அப்படியே நிலவில் இருக்குமாம்.

No comments:

Post a Comment