Wednesday, June 29, 2011

தலையில் அடித்து‍ கொள்ள ஒரு‍ கதை

கட்டம் போட்ட லுங்கியும், தன் நிறத்துக்கு‍ சற்றும் பொருத்தமேயில்லாத ஒரு‍ டி-ஷர்ட்டும் போட்டுக் கொண்டு‍ மிதிவண்டியில் தனது‍ இரண்டரை வயது‍ பெண் குழந்தையை முன்பக்க கூடையில் வைத்து‍ கொண்டு‍, ஆயிரம் தொழிலாளர்களுக்கு‍ மேல் வேலை பார்க்கும் அந்த கம்பெனியின் முன்பு நின்றான் அவன்.  பதினைந்து‍ நாள் தாடி‍ வேறு.  சோகமாம்.

வெளியே நின்று‍ கொண்டிருநத் செக்யூரிட்டிகளிட்ம் மிகுந்த சோகத்துடன் தன் குழந்தையை காட்டி‍ காட்டி‍ ஏதோ சொல்ல அடுத்த சில மணித் துளிகளில் அத்தொழிற்சர்லை ஏக பரபரப்பு அடைகிறது. டைம் ஆபிஸில் ஓர் ஓரமாக அந்த நபரை உட்கார வைத்து‍ விட்டு‍ உள்ளே செல்கிறார் ஒரு‍ அலுவலர்.

சிறிது‍ நேரம் கழித்து‍ வரும் அவர் அந்த நபரிடம் ஏதோ கூறி ஆமோதிக்கிறார்.  கையெடுத்து‍ கும்பிட்டுவிட்டு‍ அங்கிருந்து‍  விடை பெற்றுச் செல்லும் அந்நபரை பாவமாக பார்த்தபடி‍ எல்லோரும் அனுப்பி வைக்கின்றனர்.  அதற்குள் விஷயத்தை கேட்டு‍ பதறியபடி‍ வந்த (அந்த ஷிப்டில் பணியாற்றும்) ஒரு‍ சில தொழிலாளர்களும் அந்நபருக்கு‍ ஆறுதல் கூறி அனுப்புகினற்னர்.

அளந்தது‍ போதும் விஷயத்தை சொல் என்கிறீர்களா?  அது‍ ரொம்பவும் சின்ன விஷயந்தான்.  வந்த நபரின் மனைவி இங்கு‍ வேலை பார்க்கிறாள்.  கம்பெனியில் காண்டிராக்ட் முறையில் வேலை.  நேற்று‍ வேலைக்கு‍ வந்தவள் இன்று‍ மாலை வரை வீட்டிற்கு‍ செல்லவில்லை. 

தேடிப்பார்த்தாகி வி்ட்டது.  எங்கும காணவில்லை.  இந்த கணவனுக்கோ சின்ன சந்தேகம்.  ஒரு‍ சூபர்வைசரின் பேரைச் சொல்லி அவரும் இவளும் ஓடிப் போயிருக்கலாம் என்று‍ கொளுத்தி்ப் போடுகிறான்.   உள்ளே சென்று‍ பார்த்தால் மேற்படி‍ நபர் மூன்று‍ நாட்களாக வரவில்லை.  வயதும் இந்தப் பெண்ணை விடக் குறைவு.

எல்லோரும் தலையிலே அடித்துக் கொள்கிறனர். அந்தப் பெண் பணிபுரியும் துறை சார்ந்த ஒரு‍ சிலர் அந்தக் கணவனுக்கு‍ ஆறுதல் கூறுகின்றனர்.  அவனோ தன்னைப் பற்றி கவலையில்லை என்றும் இந்தக் குழந்தை இரு‍ நாட்களாக தாய் முகம் காணாது‍ அம்மா அம்மா என அழுது‍ புலம்புவதாகவும் அதைக் கண்டு‍ என்னால் தாங்க முடியவில்லை என்றும் கூறி எல்லோரிடமும் இரக்கத்தை வரவழைக்கிறான்.

இவளெல்லாம் ஒரு‍ தாயா?  

தன் குழந்தையை எண்ணிப் பார்க்க வேண்டாவா? 

அவன் கூப்பிட்டால் இவளுக்கு‍ எங்கே போனது‍ அறிவு?

அவன் வயதெனன், இவள் வயதென்ன?

தீர்ப்பு சொன்ன நாட்டு‍ ஆமைகள் பலவாறு‍ சலித்துக் கொண்டன.

அன்று‍ வெள்ளிக்கிழமை.  மறுநாள் அரசு‍ விடுமுறை.  பின்பு ஞாயிறு‍.  திங்களன்று‍ கம்பெனிக்கு‍ வேலைக்கு‍  வருகிறார்கள்.   அந்தப் பெண்ணும் வருகிறாள்.  தளர்ந்து‍ போன நடை. அழுது‍ அழுது‍ சிவந்த கண்கள்.  தலையைக் குனிந்தவாறே வந்து‍ தன் இருக்கையில் அமர்கிறாள்.  

ஒவ்வொருவறாக அவளை  சூ‍ழ்கிறார்கள்.  கோபமாக கேள்வி தொடு‍க்க ஆயத்தமாகும சமயம் அவளே ஆரம்பிக்கிறாள்.  எல்லாவற்றையும் சொல்கிறாள்‌.  இப்பவும் எல்லோரும் தலையில் அடித்து‍ கொள்கிறார்கள்.

விஷயம் இதுதான்.  சம்பந்தப்பட்ட தாடிக்கார பார்ட்டி‍ தண்ணிப் பாரட்டி.  வேலையிலும் இல்லை.  அவ்வப்போது‍ இந்தப் பெண் கொடுக்கும் பணம் போதவில்லை என்று‍ வீ்ட்டிலேயே திருடி‍ நீராகாரம் அடித்திருக்கிறார்.  எவ்வளவோ சொல்லியும் தன் கணவன்  திருந்தாது‍ கண்டு-‍  கோபித்துக்  கொண்டு‍ தன் அம்மா வீட்டிற்கு‍ சென்றிருக்கிறார் இந்தப் பெண்.  அங்கேயே இரண்டு‍ நாட்கள் சொல்லாமல் தங்கி விட்டார். 

கு‍ழந்தையை வைத்துக் கொண்டு‍ தன் கணவன் நன்றாக படட்டும் என்று‍ விட்டுவிட்டாள் இந்தப் பெண்.  ஆனால் எந்த பாரில் எந்த கோணத்தில் படுத்தபடி‍ நம் பார்ட்டி‍ யோசித்தது‍ என்று‍ தெரியவில்லை. அழகாக திரைக்கதை, வசனம் எழுதி தன் குழந்தையையும் கேரக்ட்ர் ஆர்டிஸ்டாக போட்டு‍ ஒரு‍ படத்தை கம்பெனியில் ஓட்டி‍ சென்று‍ விட்டது.

இக்கதையை கேட்டவர்கள் எல்லோரும் இப்பொழுது‍ அவனை அர்ச்சிக்க ஆரம்பிக்க ஒரு‍வர் மட்டும் சற்று‍ யோசித்து‍ விட்டு‍ கேட்கிறார். ஏன் குறிப்பாக  அந்த சூபர்வைசரை அந்த தாடி‍ சொல்லியது.  அவருக்கும், தாடிக்கும், இந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு?

ஒருநாள் நல்ல மூடில் இருக்கும் (கனாக்காலம்?) போது‍ சினிமாவிற்கு‍ சென்றிருக்கிறார்கள்.   இந்த சூபர்வைசரும் அப்படத்திற்கு‍ வந்திருக்கிறார்.  தன்னுடன் பணியாற்றுகிறாரே என்று‍ இவரை தன் கணவனுக்கு‍ இந்தப் பெண் அறிமுகம் செய்து‍ வைக்க நம் தாடியோ அன்றே திரைக்கதை - வசனத்தை ரெடி‍ செய்து‍ விட்டு‍ அரங்கேற்றத்திற்கு‍ நாள் பார்த்துக் கொண்டிருந்திரு‍க்கிறது.

அந்தப் பெண் இந்த சமயம் பார்த்து‍ எஸ்கேப்பாக அழகாக அண்ணன் அடித்து‍ ஆடிவி்ட்டார்.   எல்லாம் சரி அந்த சூபர்வைஸர் மூன்று‍ நாடகள் வரவி்ல்லை என்று‍ சொன்னாயே அது‍ என்ன கதை என்கிறீர்களா?  அம்மாவுக்கு‍ உடல்நிலை சரியில்லை என்று‍ வெளியூருக்கு‍ சென்று‍ விட்டார்.  

அந்த சூபர்வைஸரும் விஷயத்தை கேள்விபட்டு‍ தன் தலையில் அடித்துக் கொண்டது‍ தனிக்கதை. எல்லாமுமே தாடிக்கு‍ சாதகமாக அமைந்தது‍ ஆச்சர்யம்தான்.